undefined

 மண்வெட்டியால் வெட்டி மகன் கொடூர கொலை... தந்தை வெறிச்செயல்!

 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மண்வெட்டியால் தாக்கி மகனைப் படுகொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தோணுகால் மேற்கு தெருவை சேர்ந்தவர் பிரியதன் (82). இவருடைய மகன் பாலமுருகன் (38). கட்டிட தொழிலாளியான பாலமுருகனுக்கு திருமணமாகி கற்பகம் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர். கற்பகத்திற்கு காது கேட்காது என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் இன்று அதிகாலையில் தந்தைக்கு மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த தந்தை, தனது  மகன் பாலமுருகனை மண்வெட்டியை எடுத்து வெட்டி படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. 

இது குறித்த தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலமுருகனின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாலமுருகனின் தந்தை பிரியதனை கைது, கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட பாலமுருகனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனை அவரது தந்தை பிரியதன் கண்டித்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாலமுருகன் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு எதுவும் காரணமாக இருக்குமா? போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!