undefined

அதிர்ச்சி... கஞ்சா போதையில் தூங்கிக் கொண்டிருந்த மகனை வெறித்தனமாய் வெட்டிகொன்ற தந்தை!

 
 

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தூங்கிக் கொண்டிருந்த மகனை கஞ்சா போதையில் பெற்ற தந்தையே மண்வெட்டியால் வெறித்தனமாக வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தோணுகால் மேற்கு தெருவை சேர்ந்தவர் பிரியதன் (82). இவருடைய மகன் பாலமுருகன் (38). கட்டிட தொழிலாளியான பாலமுருகனுக்கு திருமணமாகி கற்பகம் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர். கற்பகத்திற்கு காது கேட்காது என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்றிரவு தந்தையும் மகனும் சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. மது போதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் தூங்கச் சென்ற நிலையில் இன்று அதிகாலையில் பிரியாதன் கஞ்சா போதையில் மண் வெட்டியைக் கொண்டு சரமாரியாக தூங்கிக் கொண்டிருந்த மகனின் கழுத்து, தலை பகுதியில் வெட்டியதில் பாலமுருகன் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மகனை கொலை செய்த தந்தை பிரியாதன் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். 

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார், பாலமுருகனின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பிரியதனிடம் தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!