அதிர்ச்சி!! தொப்புள் கொடியுடன் குழந்தையை குழிக்குள் வீசி கொலை செய்த தாய்!!

 

திருவள்ளூர் மாவட்டம் கொசவம்பாளையம் சுடுகாட்டில்  காலி இடத்தில் இன்று காலை பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை உயிருடன் பள்ளத்தில் கிடந்தது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு அவ்வழியாக சென்ற பொதுமக்கள் வந்து பார்த்தபோது பச்சிளம் குழந்தை உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


 
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், குழந்தையை மீட்டு விசாரணை நடத்தினர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையின் முகத்தில் சிறிய காயங்கள் இருந்தன.

இதற்கிடையே காலை 10 மணிக்கு குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. இதனையடுத்து கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் விசாரணையை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் அதே பகுதியில் வசித்து வரும்  லதா என்பவர் குழந்தை பிறந்ததும் அதனை வீசியுள்ளார்.  
கணவரை இழந்த லதாவுக்கு ஏற்கனவே 2 பிள்ளைகள் உள்ளனர். ஒருவரிடம் தகாத உறவில் இருந்ததால் இந்த குழந்தை பிறந்ததால் அவர் குழந்தையை  பள்ளத்தில் வீசி எறிந்துள்ளார்.   இதில் குழிக்குள் விழுந்த குழந்தை காயம் அடைந்து இறந்து உள்ளது. இதையடுத்து லதாவை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!