கதறும் பொதுமக்கள்... வரலாற்றில் புதிய உச்சமாக ரூ.51,000யைக் கடந்தது ஒரு சவரன் தங்கம் விலை!

 

வரலாற்றில் புதிய உச்சமாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ.51,000யைக் கடந்து பெரும் அதிர்ச்சியை இல்லத்தரசிகளிடையே ஏற்படுத்தியுள்ளது. பங்குனி, சித்திரைம் மாதங்கள் முடித்து திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் தங்கத்தின் இந்த திடீர் விலை உயர்வால் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்தது. இதன்படி நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50000க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று மேலும் உயர்ந்து இல்லத்தரசிகள், நகைப்பிரியர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு ரூ140 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ6390க்கும், சவரனுக்கு ரூ1120 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ51120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்தியாவில் தங்கம் விலை சர்வதேச விலையை அடிப்படையாகக் கொண்டு இருக்கிறது. அவை நாணய ஏற்ற இறக்கங்கள் மற்றும் வட்டி விகிதங்கள் மற்றும் பணவீக்கம் போன்ற பிற காரணிகளின் அடிப்படையில் இருக்கும். இயற்கை தேவை என்பதும் தங்கத்தின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. கணினி தங்கத்தில் அதிகப் பணப்புழக்கம் அதிகமாக இருந்தால், தங்கப் பரிமாற்றம் வர்த்தக நிதியங்கள் ஏமாற்றும் தங்கம் போன்று இருக்கும்.

மற்றொரு முக்கியமான காரணி மத்திய வங்கிகளின் கொள்முதலை பொருத்து, நாம் அனைவரும் அறிந்திருக்கும் வகையில் , அமெரிக்கா அதிகத் தங்க இருப்புக்களை வைத்திருக்கிறது. பல மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கும் போது, இந்தியா உட்பட உலகம் முழுவதும் தங்க விலைகளைப் பாதிக்கும். இருப்பினும், விலைமதிப்பற்ற உலோகப் பொருட்களின் விலை அதிகரிப்பைத் தவிர்ப்பதற்காக அவை அரிதாக விற்கப்படும். எனவே, இந்தக் காரணிகள் இன்று இந்தியாவில் தங்க விலையைப் பாதிக்கின்றன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்