இன்று கடைசி தேதி... தமிழகத்தில் 1 லட்சம் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை.. எப்படி விண்ணப்பிப்பது?!
தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ இடஒதுக்கீட்டில் இலவச மாணவர் சேர்க்கைக்கு பள்ளி வாயிலாக விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் மாணவர் சேர்க்கைக்கு பள்ளிக்கு சென்றே பெற்றோர்கள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியாது எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இலவச மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு rteadmission@tnschools.gov.in नं என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் 14417 என்ற தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 8,000க்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் 1 லட்சம் இலவச மாணவர் சோ்க்கை இடங்கள் உள்ளன. மத்திய அரசு நிதியை தற்போது விடுவித்துள்ளதால் தமிழக தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கையானது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கெனவே சேர்க்கப்பட்ட மாணவா்களில் தகுதியானவா்களை ஆர்டிஇ ஒதுக்கீட்டில் பதிவு செய்வதற்காக 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால், 7 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். அந்த வகையில் பள்ளியின் நுழைவு வகுப்பில் இதுவரை சேர்க்கை பெற்ற குழந்கைளின் மொத்த எண்ணிக்கையை இன்று அக். 7ம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் ஆர்டிஇ சேர்க்கைக்கு தகுதியான மாணவர்களின் சான்றுகளை அக்.9ல் பதிவுசெய்ய வேண்டும். தொடா்ந்து தற்காலிக தகுதிப் பட்டியல் அக்.10ம் தேதியும், இறுதிப்பட்டியல் அக்.14ம் தேதியும் வெளியிடப்படும். மேலும் இடங்களைவிட அதிக மாணவர்கள் இருப்பின் குலுக்கல் அக்டோபா் 16ல் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!