தலைவராக இருக்கவே தகுதியில்ல… ராகுல்காந்தியை வெளுத்தெடுத்த வானதி சீனிவாசன்!
இந்திய தலைநகர் டெல்லியில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி அதில் பாஜக 27 வருடங்களுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. முந்தைய சட்டசபை தேர்தலில் 62 தொகுதிகளில் வெற்றி பெற்று அசைக்க முடியாத சக்தியாக ஆம் ஆத்மி உருவாகியிருந்த நிலையில் இந்த தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது.
அதே நேரத்தில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் டெபாசிட் இழந்தது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஒற்றுமை இல்லாமல் டெல்லி தேர்தலை சந்தித்தது தான் காரணம் என பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பல இடங்களில் ஆம் ஆத்மி நிர்வாகிகள் சொற்ப வாக்குகளில் தான் தோல்வியை தழுவியுள்ளனர். ஒரு வேளை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு இருந்தால் அந்த வாக்குகள் பிரிந்து போய் இருக்காது. மீண்டும் டெல்லியில் ஆட்சியைப் பிடித்திருக்கலாம் என்பதே இந்தியா கூட்டணியில் இருக்கும் பல அரசியல் தலைவர்களின் கருத்தாக இருந்து வருகிறது.
இது குறித்து தமிழக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ராகுல் காந்தி எப்படிப்பட்ட தலைவர் என்பது பல்வேறு தேர்தல்களின் மூலம் நிரூபணம் ஆகி விட்டது. காங்கிரஸ் ஒரு தேசிய கட்சியாக இருக்கும் நிலையில் ராகுல் காந்திக்கும் தேசியத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா.?முற்றிலும் தேசவிரோத கருத்துகளை கூறக்கூடிய ஒரு தலைவராக தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார். தன்னுடைய கட்சியின் சித்தாந்தமே தெரியாத ஒரு தலைவர் அந்த கட்சியில் இருப்பது துரதிஷ்டவசமானது. மேலும் அதனால் தான் காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை என்பது வரவில்லை எனக் கூறியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!