வைரல் வீடியோ... விஜய்யின் முதல் 2 மாத ஆட்சி நன்றாக இல்லை - சாலமன் பாப்பையாவின் கடைசிப் பேட்டி!

 

தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா மறைவைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய்யின் ஆட்சி குறித்து அவர் அளித்த கடைசிப் பேட்டி சமூக வலைதளங்களில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

தமிழக முதல்வர் விஜய்யின் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் இரண்டு மாதங்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை எனவும், அது நன்றாக இல்லை எனவும் அவர் வெளிப்படையாகத் விமர்சித்திருந்தார்.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/-deB7AlGceo?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/-deB7AlGceo/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

ஆரம்பக் கால செயல்பாடுகளை வைத்து முழுமையாக எதையும் கணிக்க முடியாது என்றும், இனி வரும் காலங்களில் அவரது ஆட்சி மற்றும் நிர்வாகம் எப்படிச் செயல்படப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் அந்தப் பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தார். மறைந்த தமிழறிஞரின் இந்த அரசியல் விமர்சனப் பேட்டி தற்போது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.