வாஷிங்டன் சுந்தர் திருப்பதியில் சாமி தரிசனம்!

 

ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஏழுமலையான் கோயிலில் இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று வருகை தந்தார்.

கோயிலில் சாமி தரிசனம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றன.