5 நாளாச்சு... சுரங்க விபத்தில் சிக்கிய 40 தொழிலாளர்களின் கதி என்னாச்சு? .. மாஸ்டர் ப்ளான்..!!
உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்க பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போது 270 மீட்டர் தொலைவில் அந்த சுரங்கம் சரிந்து விழுந்தது. 30 மீட்டர் நீளப் பகுதி அப்படியே சரிந்ததால் ஒருபக்கம் முழுவதும் மூடிக் கொண்டது. இதனால் 40 தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். இவர்களை மீட்கும் பணி 5 வது நாளாக தொடர்கிறது.தொடர் மழையால் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தொழிலாளர்களுடன் பைப்கள் மூலம் தகவல் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு இதன்மூலம் தண்ணீர், ஆக்சிஜன், உணவு, மருந்துகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதே போல் ஒரு சம்பவம் 2018ல் தாய்லாந்தில் குகைக்குள் ஜூனியர் கால்பந்து அணியை சேர்ந்த 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்கள் சிக்கித் தவித்தனர். தொடர்மழையால் குகையும் வெள்ளக்காடாகியது. 2 வார போராட்டத்திற்கு பின்னர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த பணியில் ஈடுபட்ட வல்லுநர்களின் உதவியை இந்திய அரசு நாடியுள்ளது. மேலும் நார்வே ஜியோ டெக்னிகல் நிறுவனத்தை சேர்ந்த மண் மற்றும் பாறைகள் சார்ந்த வல்லுநர்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது.
இதுவரை சிக்கிக்கொண்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன், மின்சாரம், மருந்துகள், உணவு, தண்ணீர் அனைத்தும் பைப்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. விரைவில் மீட்டு விடுவோம். அனைவரும் தைரியமாக நம்பிக்கையுடன் இருங்கள் என நம்பிக்கை அளிக்கப்பட்டு வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!