முதல்வர் விஜய்க்கு  'Z பிளஸ்' பாதுகாப்பு...  55 வீரர்கள் 24 மணிநேரமும் தீவிரக் கண்காணிப்பு!

 

தமிழக முதலமைச்சர் விஜய்க்கு இன்று (மே 11) காலை முதல் மத்திய அரசின் உயரிய பாதுகாப்பான 'இசட் பிளஸ்' (Z+) பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக டெல்லியிலிருந்து சிறப்புப் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்னை வருகை தந்து தங்களது பணிகளைத் தொடங்கியுள்ளனர். முதல்வரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதப்பட்ட சூழலில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த 'இசட் பிளஸ்' பாதுகாப்பில், சுமார் 55 மத்தியப் பாதுகாப்புப் படை வீரர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் முதலமைச்சரின் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவர்கள் அனைவரும் எம்பி5 (MP5) ரக அதிநவீனத் துப்பாக்கிகளுடன் எந்நேரமும் தயார் நிலையில் இருப்பார்கள். முதலமைச்சர் செல்லும் இடங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் அவரது இல்லம் என அனைத்து இடங்களிலும் இனி இவர்களின் பாதுகாப்பு வளையம் பலப்படுத்தப்பட்டிருக்கும்.

மேலும், இந்தப் பாதுகாப்புப் பிரிவில் 10-க்கும் மேற்பட்ட என்எஸ்ஜி (NSG) கமாண்டோக்களும் இணைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலக் காவல்துறையினருடன் இணைந்து இவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளனர். தமிழக முதலமைச்சருக்கு மத்திய அரசு இவ்வளவு பெரிய அளவிலான பாதுகாப்பை வழங்கியுள்ளதை அடுத்து, கோட்டை மற்றும் முதல்வரின் இல்லத்தைச் சுற்றிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.