கிரேன் மோதி விபத்து... ஊர்க்காவல் படை காவலர் பலியான சோகம்!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி அருகே கிரேன் வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த ஊர்க் காவல் படை காவலர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் வீரபாகு மகன் சதீஷ்குமார் (47). இவர் ஆறுமுகனேரி பேயன்விளையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் இரவுக் காவலராகவும், ஊர்க்காவல் படை காவலராகவும் பணியாற்றி வந்தார். இவரது மனைவி அமுதலட்சுமி, சாத்தான்குளம் துணை வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றுகிறார்.
ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தனது வயலுக்குச் சென்ற சதீஷ்குமார், பின்னர் அங்கிருந்து காயல்பட்டினம் புறவழிச்சாலையில் நேற்று முன்தினம் இரவு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கிரேன் வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவர், காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் நேற்று உயிரிழந்தார்.
இவ்விபத்து குறித்து ஆறுமுகனேரி போலீசார் வழக்குப்பதிந்து, கிரேன் ஓட்டுநர் முக்காணி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் இசக்கி ராஜா (40) என்பவரை கைது செய்தனர்.
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!