குஜராத்தின் 17-வது முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்றுக் கொண்டார்

 

அடுத்த ஆண்டின் இறுதியில் குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சனிக்கிழமை மாலை குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக குஜராத் மாநில பா.ஜனதா சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் நேற்று காலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில், புதுமுக எம்.எல்.ஏ.வான பூபேந்திர படேல் (வயது 59), குஜராத்தின் புதிய முதலமைச்சராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

குஜராத்தின் 17-வது முதலமைச்சராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இன்று பிற்பகல் காந்திநகரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், அம்மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ் விராட், பூபேந்திர படேலுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நரேந்திரசிங் தோமர், பிரகலாத் ஜோஷி ஆகியோர் பங்கேற்றனர்.