ஸ்டாலின், கருணாநிதியை விட ஆபத்தானவர் என H ராஜா கூறியதன் காரணத்தை கூறிய பாஜக தலைவர் அண்ணாமலை.

 

முன்னாள் திமுக தலைவர் மற்றும் முதல்வர் கருணாநிதியை விட தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் பயங்கமானவர் என்று ஹெச் ராஜா கூறியதன் அர்த்தத்தை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கமாக கூறியுள்ளார்.

சமீபத்தில், டிவிட்டர் ஸ்பேசில் ஹெச் ராஜா அண்மையில் பேசுகையில், “கருணாநிதியை விட பயங்கரமானவர் மு.க.ஸ்டாலின்” என கூறினார். இந்த கருத்து இணையத்தில் வைரலாகியது.

இது சர்ச்சையாகிய வேளையில்,  இன்றைய செய்தியாளர் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதற்குண்டான விளக்கத்தை அளித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை விட தற்போதைய முதல்வர் ஸ்டாலின் பயங்கரமானவன் என ஹெச் ராஜா  கூறியதன் அர்த்தம்  “ முன்னாள் முதல்வர் கருணாநிதி தனிமனிதராக சிந்திக்கக்கூடியவர் ஆனால் ஸ்டாலினை வெளியில் இருந்து இயக்குகிறார்கள்”  என அண்ணாமலை கூறினார்.