இபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி!!

 


தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சிதலைவருமான இபிஎஸ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

வழக்கமான பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எடப்பாடி பழனிசாமி எம்ஜிஎம் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் குடலிறக்க பிரச்சினைக்காக எடப்பாடிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்த தொடர் பரிசோதனைகளுக்காக காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிந்த பின்னர் இன்று மதியமே அவர் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.