6 முறை முதலமைச்சராக இருந்த இமாசல பிரதேச முன்னாள் முதலமைச்சர் வீர்பத்ர சிங் காலமானார்!

 

இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான வீர்பத்ர சிங் (வயது 87) உடல்நலக்குறைவு காரணமாக சிம்லா நகரில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4 மணியளவில் காலமானார். அவரது உடல் சொந்த ஊருக்கு இன்று கொண்டு செல்லப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 13-ந்தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, பின்பு அதில் இருந்து குணமடைந்தார். எனினும், அதன்பின்பு நிம்மோனியாவால் அவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு நீரிழிவு மற்றும் பிற சுகாதார குறைபாடுகளும் இருந்துள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன் சுவாச கோளாறு ஏற்பட்டு வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார் என மருத்துவர் ஜனக் ராஜ் கூறியுள்ளார்.

வீர்பத்ர சிங் 9 முறை எம்.எல்.ஏ.வாகவும், 5 முறை எம்.பி.யாகவும், 6 முறை முதலமைச்சராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.