பெட்ரோல் விலை உயர்வுக்கு முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம்

 

இந்தியாவில் பல நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது.

இந்த விலை உயர்வு குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பதிவில்

பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு தொடங்கிவிட்டது. பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் நிரப்பும்போது மோடி அரசால் பணவீக்கம் உயர்வதையும் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். வரி வசூல் தொற்று அலைகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன என்று பதிவித்துள்ளார்.