உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண்சிங் உடல் நிலை கவலைக்கிடம்

 

உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், ராஜஸ்தான் மாநில முன்னாள் கவர்னருமான கல்யாண்சிங் (89), கடந்த 4-ந் தேதி லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோய்த்தொற்று மற்றும் சுயநினைவு குறைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில், மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்

‘‘20-ந் தேதி மாலையில் இருந்து கல்யாண்சிங்குக்கு உயிர் காக்கும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவரது முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாட்டை சிறப்பு மருத்துவர்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்கள். மருத்துவமனை இயக்குனர் திமான், சிகிச்சை முறைகளை நாள்தோறும் கண்காணித்து வருகிறார்’’ என்று கூறப்பட்டுள்ளது.