காஷ்மீர் செல்கிறார் ஜனாதிபதி

 

3 நாள் பயணமாக வரும் 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காஷ்மீருக்கு செல்கிறார்.

ஸ்ரீநகரில் நடைபெறும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். திராஸ் போர் நினைவுச்சின்னத்தில் நடைபெறும் கார்கில் போர் வெற்றிதின கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார்.

ஜனாதிபதி வருகையையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.