சசிகலா ஓபன் டாக்! ஜெயலலிதா குறித்து யாரும் அறிந்திராத புது தகவல்கள்!

 


தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. இவர் தற்போதைய அரசியலிலிருந்து தம்மை தள்ளி நிறுத்திக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். மேலும் தற்போது கட்சியில் இருக்கும் பெரும்பாலானோர் சசிகலாவால் ஏதோ ஒரு வகையில் ஆதாயமடைந்தவர்களே.
எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜெயலலிதாவின் பெயரில் வந்தாலும், அந்த பதவியை பெற்றவர்கள் சசிகலாவின் கண்பார்வை இல்லாமல் பெற்றிருக்க மாட்டார்கள் என்பது அனைவருமே அறிந்த தகவல் தான்.


இந்நிலையில், தொண்டர்களுக்கு பேசும் ஆடியோக்களை வெளியிட்டு வந்த சசிகலா, தற்போது தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்து வருகிறார். அந்த வகையில், தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஜெயலலிதாவுடனான நட்பு பற்றியும், போயஸ் கார்டன் அனுபவம் பற்றியும் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஜெயலலிதாவின் கோபம் பற்றி சசிகலா பேசுகையில், “அக்கா சிஸ்டமெட்டிக்கா இருப்பாங்க. சிறு வயதில் இருந்தே அவர் அப்படியே வளர்ந்து விட்டார். ஏதேனும் ஒரு பொருளை எடுத்தால் அதனை எடுத்த இடத்தில் அவர் வைப்பார்.

அதேபோன்றுதான் அனைவரும் இருக்க வேண்டுமென்று நினைப்பார். அப்படி செய்யவில்லையென்றால் அவருக்கு கோபம் வரும்.அவருடைய வேலையை இரவு எத்தனை மணியானாலும் முடித்து விட்டுத்தான் தூங்குவார். அதேபோன்று அமைச்சர்கள், கட்சியினர், அதிகாரிகள் என அனைவரும் அவர்களுடைய பணியை செய்ய வேண்டும் என்று விரும்புவார். இல்லையென்றால் அவருக்கு கோபம் வரும்.அப்படியே கோபப்பட்டாலும், பத்து நிமிஷத்தில் அதை மறந்திருவாங்க. மீண்டும் சகஜமா பேச ஆரம்பிச்சுடுவாங்க” என சசிகலா ஜெயலலிதா குறித்து நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.