BREAKING!போதைப்பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை!

 

தமிழகத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது முதல்வர் ஸ்டாலின் முக்கிய செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பள்ளி கல்லூரிகளுக்கு அருகிலே தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பவர்கள்,கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும்,தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்க சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என உறுதி அளித்துள்ளார்.


தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை முற்றிலும் தடுக்க தமிழக அரசு முன்வருமா? என்று சட்டப்பேரவையில் பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே மணி கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில் இதுதான். தமிழக சட்டப் பேரவையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கேள்வி நேரத்தில் உடனடியாக முதல்வர் பதில் அளித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக முதல்வர் சார்ந்த துறைகள் கேள்வி நேரத்தில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.