கதிகலங்கும் அரசு ஊழியர்கள்! தமிழக அரசின் புதிய உத்தரவு!

 


தமிழக அரசு துறை வாரியாக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு வேலையில் இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு 1 வருட காலம் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஆனால் அதில் பேறுகால விடுப்பில் செல்லும் மகளிருக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்ததும் பல்வேறு தரப்பில் இருந்தும் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

அரசு ஊழியர்களுக்கு முதல்வருக்கு சமூகவலைதளங்கள் மூலம் தமது நன்றியை பதிவு செய்தனர். ஆனால் தற்போது தமிழக அரசு வெளியிட்டு இருக்கும் இந்த அறிவிப்பால் பெரும் அரசு ஊழியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த அடிப்படை விதிகளில் திருத்தம் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.