இன்று மோடியை சந்திக்கும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்!

 

தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் செப்டம்பர் 2017ல் பொறுப்பேற்றார். இந்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க இருக்கிறார். நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசுகிறார். அவர் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாட இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பு ஏற்கனவே முன் அனுமதி பெற்று திட்டமிடப்பட்ட சந்திப்பு தான் எனவும் திடீர் விவகாரம் கிடையாது எனவும் கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிரதமரை முதல் முறையாக சந்தித்துப் பேசுவது குறிப்பிடத்தக்கது.