தமிழகத்தின் புதிய ஆளுநர் ஆர். என்.ரவி!

 

தமிழகத்தின் ஆளுநராக பதவி வகித்த பன்வாரிலால் புரோகித் நேற்றுடன் அவரது வேலைகளை முடித்துகொண்டு இன்று தமிழகத்தில் இருந்து அதிகாரப் பூர்வமாக விடைபெற்றார்.

மரியாதை நிமித்தம் தமிழக ஆளுநர் நன்றி தெரிவித்து அவரை வழியனுப்பி வைத்தார்.இவர் பஞ்சாப் கூடுதல் கவர்னராக பொறுப்பேற்க இருப்பதால் தமிழகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.


இதனையடுத்து தமிழகத்தின் புதிய தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி செப்டம்பர் 18ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவருக்கு சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது