மன்மோகன் சிங்கின் உடல்நிலை குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்!

 


இந்தியாவில் கொரோனா 2வது அலையால் தொடர்ந்து 4 நாட்களுக்கும் மேலாக 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவருடைய உடல் நிலை சீராக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஹர்ஷவர்தன் தமது ட்விட்டர் பதிவில், மன்மோகன்சிங்கிற்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங்கிற்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவரான மன்மோகன்சிங், கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

dinamaalai.com