எச்சரிக்கை.! தவறு செய்யும் அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்!

 

தமிழகத்தில் புதிய முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். இதனையடுத்து பல அதிரடி நடவடிக்கைகளையும், மக்கள் நலத்திட்டங்களையும் தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் அரசு அலுவலர்கள் அவர்களுடைய பணியினை சரியாகவும் , நேர்மையாககவும் செய்ய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” கொரோனா சிகிச்சை, நிவாரண பணி அலுவலர்கள், நிறுவனங்கள் அரசுக்கும் மக்களுக்கும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

சில அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் சட்டத்திற்கு புறம்பான வகைகளில் செயல்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது. சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தவறுகளை செய்யும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுவார்கள். தவறுகள் நடைபெறும் இடங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயம் செய்துள்ளதை விட கூடுதல் விலைகளுக்கு மருந்துகளை விற்பனை செய்வது, அரசின் இலவச சேவைகளுக்கு லஞ்சம் பெறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசின் பணித்துறையில் எந்த நிலையில் பணியாற்றும் அலுவலர்களாக இருந்தாலும், எந்த வகையான நிறுவனமாக இருந்தாலும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுமக்களை அரசு அதிகாரிகளை அரசியல்வாதிகள் மிரட்டினாலோ அல்லது நலத்திட்ட உதவிகளுக்கு உதவிகோரவோ Cmcell@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தலைமைச் செயலகத்தின் நேரடி தொலைபேசி எண் 044- 25671764 எண் மூலமாகவோ தொடர்புக் கொள்ளலாம். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் பாரபட்சமின்றி பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.