செப்டம்பர் 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுமா?இன்று முதல்வர் ஆலோசனை!
Aug 30, 2021, 10:15 IST
தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுகாதாரத்துறை, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பள்ளிகள் கல்லூரிகள் திறப்பு குறித்து உறுதியான தகவல் வெளியிடப்படலாம் என்கின்றன முதல்வர் அலுவலக வட்டாரங்கள்.