அதிர்ச்சி! குத்துச் சண்டை போட்டியில் மயங்கி விழுந்து உயிரிழந்த வீராங்கணை!

 


கனடாவில் மான்ட்ரியல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஜாரி பார்க்கில் சர்வதேச குத்துச்சண்டை போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் கலந்து கொள்ள 18 வயதேயான மெக்சிகன் குத்துச்சண்டை வீராங்கனை ஜெனட் ஜக்காரியா வந்தார்.


கியூபெக்கின் மேரி ஃபையருடன் இவர் மோதினார். திடீரென போட்டியின் போது சுருண்டு விழுந்து மயக்கமடைந்தார். 6 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நான்காவது சுற்றில் ஜானட் சுருண்டு விழுந்தார். அவரை மீட்டு உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.


வியாழக்கிழமை சுமார் 3.45 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜானட் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள இரங்கல் அறிக்கையில், அவரது குடும்பத்தினர், அன்புக்குரியவர்கள், நண்பர்கள் மற்றும் குறிப்பாக அவரது கணவருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறையின் உடற்கூறு ஆய்வாளர் அலுவலகம் இந்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.