உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

 

இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் நகரில் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி தொடங்குவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி (கேப்டன்), ரகானே (துணைக் கேப்டன்), ரோகித் சர்மா, ஷுப்மான் கில், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், சகா, அஷ்வின், ஜடேஜா, பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.