இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்லும் ! ஜோதிடர் திட்டவட்டம்!

 

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் அமீரகத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 14-வது ஐ.பி.எல். சீசனின் 2-வது கட்ட லீக் போட்டிகள் செப்டம்பர் 19 ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி அக்டோபர் 15ம் தேதி இன்று வரை நடைபெறுகிறது.

துபாயில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.சென்னை அணியை பொறுத்த வரை ஏற்கனவே 2010, 2011, 2018 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்றுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏற்கனவே 2102, 2014 ஆகிய 2 முறை பட்டம் வென்றுள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் 4வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை கைப்பற்றும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.அத்துடன் ஜோதிடத்தில் சென்னை அணி தான் கோப்பையை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.