முத்தையா முரளிதரனுக்கு நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி!

 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் முத்தையா முரளிதரனும் ஒருவர்.

தன்னுடயை சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இவர் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி இமாலய சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இவர் தற்போது ஐபிஎல்-இல் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக உள்ளார்.

இவர் சென்னையில் இருந்து வந்த சூழலில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. 49 வயதாகும் முத்தையா முரளிதரன் சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவர் விரைவில் குணமடைந்து நலமுடன் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.