இந்தியா படுதோல்வி! ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

 


இந்தியா இங்கிலாந்து 3 வது டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 78 ரன்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து 432 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


மூன்றாவது நாள் களம் இறங்கிய இந்திய அணி வீரர்கள் ஆட்டநேர முடிவில் வலுவான நிலையில் இருந்த இந்தியா 4வது நாளில் 278 ரன்னில் ஆல் அவுட் ஆனது.


இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதிகபட்சமாக புஜாரா 91 ரன்கள், ரோகித் 59, கோலி 55, ஜடேஜா 30 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணியின் தரப்பில் ராபின்சன் 5 விக்கெட்டுகள், ஓவர்டன் 3 விக்கெட்டுகள், ஆண்டர்சன், மொயின் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதன் மூலம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது 1-1 என்ற சமநிலையில் உள்ளது.