இங்கிலாந்தில் நடனமாடி கலக்கிய இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள்!

 

இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் பிரிஸ்டலின் பல்வேறு இடங்களுக்கு சென்றனர்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் பங்கேற்ற ஒரு டெஸ்ட் போட்டி ‘டிரா’வில் முடிந்தது. இந்நிலையில், நாளை இரு அணிகளும் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.
இதற்காக இந்திய அணியின் வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் உள்ளிட்டோர் பிரிஸ்டலில் தங்கியுள்ளனர். நேற்று பல்வேறு இடங்களுக்கு சுற்றிப் பார்க்கச் சென்ற அவர்கள், அப்போது நடனம் ஆடி கலக்கினார்கள். இது குறித்த வீடியோவை இந்திய கிரிக்கெட் போர்டு வெளியிட்டது.

அந்த வீடியோ பதிவில், ‘இந்திய வீராங்கனைகள் டெஸ்ட் போட்டிக்குப் பின் நேற்று பிரிஸ்டலில் பல்வேறு பகுதிகளுக்கு சென்றனர். ஒருநாள் தொடரில் புத்துணர்ச்சியுடன் பங்கேற்க இது உதவும். பலர் நடனம் ஆடி கலக்கினர்’ என தெரிவித்துள்ளது.