பாராலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக வில்வித்தை வீரர் ஹர்வீந்தர் சிங்கிற்கு பிரதமர் பாராட்டு

 

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக வில்வித்தை வீரர் ஹர்வீந்தர் சிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

“வில்வித்தை வீரர் ஹர்வீந்தர் சிங் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். சிறப்பான திறமை மற்றும் உறுதியை வெளிப்படுத்தி பதக்கத்தை வென்றுள்ளார். வரலாற்று சிறப்புமிக்க வெண்கல பதக்கத்தை வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். எதிர்வரும் காலங்களில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்,” என்று தமது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் கூறியுள்ளார்.