ஆசிரியர்களுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கடன் உதவி!

 

தமிழக பள்ளிகளில் ஆசிரியராக பணி புரிபவர்களுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த கடன் உதவித் தொகையானது ஆசிரியர்களின் திருமண செலவுகள், பைக் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்குவதற்காகவும் பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்த பள்ளிக்கல்வி இணை இயக்குனர் அனைத்து முதன்மை கல்வி அலுவலருக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை அனைத்து ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.