தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகளில் அதிரடி மாற்றம் ! தமிழக அரசு அறிவிப்பு!

 


தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நவம்பர் 4 ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குபவர்கள் பயன்பெறும் வகையில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பயன்பெறும் வகையில் நவம்பர் மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசிய பொருட்கள் அதிகபட்சமாக முன்நகர்வு முழுமையாக முடிக்க வேண்டும்.


மேலும் நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்க மக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.