இவைகளை இந்த விலைக்கு மேல் விற்றால் நடவடிக்கை ! தமிழக அரசு அதிரடி!

 


தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. இந்நிலையில் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கிருமி நாசினி, முகக்கவசம் உட்பட 15 பொருட்கள் அத்தியாவசிய பொருட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

15 பொருட்களுக்கும் அதிகபட்சமாக விற்கப்பட வேண்டிய விலையையும் நிர்ணயித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி N95 முகக்கவசம் ரூ.22க்கும், சானிடைசர் 200 மி.லி 110 ரூபாய்க்கும், பிபிஇ கிட் உடை 273 ரூபாய்க்கும், ஆக்சிஜன் மாஸ்க் 54 ரூபாய்க்கும், பல்ஸ் ஆக்சிமீட்டர் 1,500 ரூபாய்க்கும் விற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்த விலையை காட்டிலும் அதிகம் வைத்து விற்கும் விற்பனையாளர்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும், பேரிடர் காலங்களில் அவசர தேவைகள் குறித்த தகவலை தெரிவிக்கவும் 9445869848 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் பேரிடர் ஆபத்துகள் குறித்து தகவல்களை வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.