அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகள்! தமிழக அரசு அரசாணை!

 


தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார். அவரது பல செயல்பாடுகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிதாக அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி அளிக்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

புதிதாக அரசு பணியில் சேரும் அரசு பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சிகள் அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்கப்படும் என சட்டமன்ற பேரவையில் முதல்வர் அறிவித்தார்.


இதன் மூலம் பவானிசாகர் சென்று பயிற்சி பெறும் நிலை தவிர்க்கப்படும் எனவும் தாமதமின்றி அரசு ஊழியர்கள் உரிய காலத்தில் தங்களுக்குரிய தகுதிகளுக்குரிய பதவி உயர்வு பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் புதிதாக அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி அளிக்கப்படும் என தமிழ்நாடு மனிதவள மேலாண்மை துறை அரசாணையை வெளியிட்டுள்ளது.