தமிழகம் முழுவதும் கலைஞர் உணவகங்கள் !!அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

 


அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு அம்மா உணவகங்கள் உருவாக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களிலும் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் இவை தற்போது வரை செயல்பட்டு வருகின்றன.


தமிழக அரசின் இத்திட்டம் இந்தியா முழுவதும் மிகுந்த பாராட்டை பெற்றது. இதே போல் ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது திமுக தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து அம்மா உணவகங்களை போல் கூடுதலாக 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஏற்கனவே 650 சமூக உணவகங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை மேலும் அதிகரிக்கப்படும். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.