மீண்டும் துவங்கும் கனமழை..!! தேதி குறித்த வானிலை மையம்..!!

 

மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதிகளில் விரைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகவுள்ளது. இதன்காரணமாக வரும் டிசம்பர் 4-ம் தேதி முதல் திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும்.

அதேபோல தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகத்தின் கடலோரங்களை ஒட்டியுள்ள மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 58 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மத்திய வங்கக் கடல் பகுதி மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் டிசம்பர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் சூறாவளி காற்று வீசும் வாய்ப்புள்ளது. அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.