ரூ 25 லட்சம் கொரோனா நிவாரண நிதி அளித்த பிரபல நடிகர்!

 


தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகள் , கட்டுப்பாடுகள் காரணமாக குறையத் தொடங்கியுள்ளது தீவிரமாக பரவி வருகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் 30 ஆயிரத்தை தாண்டி வருகிறது. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.


இதனை தொடர்ந்து பலரும் தமிழக அரசின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய்சேதுபதி, தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கொரோனா நிவாரண நிதியாக 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.