BREAKING! மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம்! தமிழக அரசு அதிரடி !

 

தமிழகத்தில் கொரோனா 2வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நவம்பர் 1 ம் தேதி முதல் 1 முதல் 8 வரையிலான பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும், பாதுகாப்பு நெறிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


இந்நிலையில் நவம்பர் 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய அடையாள அட்டை , சீருடை ,பள்ளி அடையாள அட்டை இவைகளில் ஏதேனும் ஒன்றை காண்பித்து பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளதுபுதிய பஸ் பாஸ் வழங்குவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளது.