வேதம் படித்த அனைத்து ஜாதியினருக்கும் 100 நாட்களில் அரசு வேலை! தமிழக அரசு அதிரடி!

 


தமிழக முதல்வர் ஸ்டாலின் அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைவருக்கும் 100 நாட்களில் வேலை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு அனைத்து ஜாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது . அதில் 100 நாள்களில்அனைத்து ஜாதியினர் அர்ச்சகராக்கப்படுவர் என்ற தமிழ்நாடுஅரசின் இந்து சமய அறநிலையத்துறையின் அறிவிப்பிற்கு மு.க.ஸ்டாலின்அவர்களுக்கும், அமைச்சர் பி.கே.சேகர்பாபுஅவர்களுக்கும் நன்றிகள்.

அந்த நியமனங்களை மதுரை மீனாட்சியம்மன் , ஸ்ரீரங்கம் ரங்கநாதர் , பழனி , திருச் செந்தூர் முருகன் , சென்னை கபாலீஸ்வரர் , திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில்களில் அமைக்க வேண்டும் . அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பணி என்பது பிறப்பால் அனைவரும் சமம் என்பதை உறுதி செய்யும் வகையில் இது அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது.


திராவிட இயக்கத்தின் 100 ஆண்டுகால சமூக நீதிப் பயணத்தில் இவ்வறிவுப்பு ஓர் மைல் கல்லாக அமைந்துள்ளது.இவர்கள் பூஜை செய்தால்தான் மகிழ்வேன் என்று கடவுள் ஒருபோதும் சொல்லவில்லை .கடவுள் அனைத்து மக்களையும் தன் பிள்ளைகளாகவே பாவிக்கிறார் என்ற அடிப்படையில் அர்ச்சகர் பணி என்பது அரசுப் பணி ஆக்கப்பட்டிருக்கிறது. பரம்பரை வழி அர்ச்சகர் முறை ஒழிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆன பின்பும் இன்று வரை மதுரை மீனாட்சி யம்மன் , பழனி , திருச்செந்தூர் முருகன் கோயில்கள் , ஸ்ரீரங்கம் அரங்கநாதர் , திருவண்ணாமலை அருணாச் சலேசுவரர் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் பரம்பரை , வாரிசுரிமை அடிப்படையில்தான் நடக்கிறது .

இது அரசியல் சட்டம் , உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது தமிழகத்தில் அரசுப் பயிற்சிப் பள்ளியில் ஆகமம் கற்று , தீட்சை பெற்ற இந்து மதத்தின் கவுண்டர் , தேவர் , வன்னியர் , முதலியார் , யாதவர் , தேவேந்திரர் , ஆதிதிராவிடர் , அருந்ததியர் , பார்ப்பனர் என அனைத்து ஜாதி மாணவர்களின் 10 ஆண்டுகால கோரிக்கைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. கொரோனா பேரிடர் காலத்திலும் இந்த நியமன அறிவிப்பை வெளியிட்டிருக்கும் தமிழக அரசு இன்னும் பல சாதனைகள் நிகழ்த்தட்டும் ! சமத்துவக் கொடியை உயர்த்திப் பிடித்து கருவறைத் தீண்டாமையை ஒழிக்கட்டும் ! எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.