undefined

இன்று முதல் இரவு ஊரடங்கு!! மக்களே கவனமா இருங்க!!

 

கேரளாவில் இன்று முதல் இரவு ஊரடகு அமலுக்கு வரவுள்ள நிலையில், அதிலிருந்து ஐயப்ப பக்தர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. புதிதாக பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் பரவலும் கேரளாவில் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளும், டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கும் அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம் இந்த ஊரடங்கு, கேரளாவில் விதிக்கப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாட்டிலிருந்து ஐயப்ப பக்தர்களுக்கும் மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.