10ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்! பள்ளிகளில் திங்கள் முதல் பெற்றுக் கொள்ளலாம்!

 

கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய மாணவர்கள், வரும் திங்கட்கிழமை, 4ம் தேதி முதல் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழைப் பெற்று கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் பொருட்டு, கடந்த கல்வி ஆண்டின் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மாணவர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழை வரும் திங்கள் முதல் அக்டோபர் 4ம் தேதி, தங்களது பள்ளிகளில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.