முன்மாதிரி கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை !! அரசாணை வெளியீடு!!

 

தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரது செயல்பாடுகள் பல மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அந்த வகையில் முன்மாதிரியாக விளங்கும் தமிழக கிராமங்களுக்கும், சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் உள்ள கிராமங்களுக்கும் ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என சட்டசபையில் அறிவித்தார்.

இதனை செயல்படுத்தும் வகையில் சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் உள்ள சிற்றூர்களுக்கு மாவட்டத்திற்கு 3 ஊர்களுக்கு ரூ. 10 லட்சம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதற்கான கணக்கெடுப்பு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் உதவி இயக்குநர்களின் அடிப்படையில் தகவல்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

இவை வருவாய்க் கோட்டாட்சியர் மூலம் சரிபார்க்கப்பட்ட பிறகு, கலெக்டர் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும்.மாவட்டத்திற்கு 3 கிராமங்கள் வீதம் 37 மாவட்டங்களிலுள்ள 111 கிராமங்களுக்கு இந்த பரிசுத்தொகை வழங்கப்பட அரசு ஆணையிட்டுள்ளது