இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுவது எப்போது? அமைச்சர் விளக்கம்!

 


தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு துறைவாரியான பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. இந்த செயல்பாடுகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

அந்த வரிசையில் தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அறிவித்தபடி விரைவில் அத்திட்டம் தொடங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் எனத் தெரிவித்துள்ளார்.