தீபாவளிக்கு 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் !

 


தமிழகத்தில் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப் பட உள்ளது. இதனை முன்னிட்டு வெளியூரில் இருந்து நகரங்களில் தங்கி படித்து கொண்டிருக்கும் பணிபுரிபவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.


இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சென்னையில் இருந்து 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.குரோம்பேட்டையில் புதிதாக 17 வழித்தடங்களில் அரசு மாநகரப் பேருந்து போக்குவரத்துகள் தொடங்கப் பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் 6 இடங்களில் இருந்து 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதே போல் தீபாவளி முடிந்து சென்னை திரும்பவும் 17000 அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், மக்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.