இன்று முதல் ஓட்டுப்போட சிறப்பு பேருந்துகள் !தமிழக அரசு!

 


தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சட்டப்பேரவை தேர்தலை நேர்மையாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதை உறுதிசெய்யும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் அடிப்படையில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இன்றுமுதல் 5ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் சென்னையில் இருந்து இயக்கப்படும் 2,225 பேருந்துகளுடன், சிறப்பு பேருந்துகளாக 3,090 ம் சேர்த்து 5ம் தேதிவரை 14,215 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மேலும் ஏப்ரல் 4, 5-ம் தேதிகளில் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் பேருந்து நிலையங்கள், தாம்பரம் ரயில்நிலையம் அருகே என பேருந்துகளை பிரித்து இயக்கப்படும் எனவும் சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் திரும்பி வரும் வகையில் ஏப்ரல் 7ம் தேதி முதல் போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவினை www.tnstc.in. என்ற இணையதளம் மூலம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

dinamaalai.com