தமிழகம் முழுவதும் இன்று முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்!

 

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் ,கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைவருக்கும் முழு ஆண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கல்வி வரலாற்றில் இல்லாத அளவு 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. சில நாட்களுக்கு முன் +2 மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் வெளியிட்டது.

இந்நிலையில் இன்று முதல் தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்க விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 10 வரை நடைபெறும் என அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 143 அரசு கலைக் கல்லூரிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.