இன்று 11 வது மெகா தடுப்பூசி முகாம்..!

 


தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.தமிழகத்தில் இதுவரை 6.71 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது.நவம்பர் இறுதிக்குள் 100 சதவீதம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 2 மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் 10 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் இன்று நவம்பர் 25ம் தேதி 11வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுதும் நடைபெறுகிறது. 76 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 40 சதவீதம் பேர் 2வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.